முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாளான இன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து இறுதியில் சேவலும் மயிலுமாக மாறிய வரலாற்றினை கொண்ட கந்தசஷ்டி விரத்தின் மகிமையினை இன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விரதம் ஆனது பக்தர்கள் ஆறு நாட்கள் உணவின்றியும் ஒருவேளை உணவருந்தியும் முருகனை நினைத்து விரதமிருப்பார்கள். அந்த வகையில் இன்றைய …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் இரு குடும்பங்களுக்கு அடிக்கல் வைத்தல் நிகழ்வு….
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பனங்காடு கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் (Rs.300,000/-) பெறுமதியில் இரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதற்கான நிதி அனுசரணையை இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார். …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு இன்று….
-கபிஷன்- முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாள் அன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து இறுதியில் சேவலும் மயிலுமாக மாறிய வரலாற்றினை கொண்ட கந்தசஷ்டி விரத்தின் மகிமையினை அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (09.11.2021 ) அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் மாலை வேளையில் சூரன் …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ 03) பாடநெறி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று…..
சிவனருள் பவுண்டேசனால் லண்டன் இரத்தினம் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ 03) நான்கு மாதகால பயிற்சி நெறி சிவனருள் கணனி தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ரி.சிவனேசன், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எல்.சரவணபவன், பயிற்றுவிப்பாளர் திரு.பர்ஜான் , சிவனருள் பவுண்டேசன் …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் கேதார கௌரி விரத காப்பு கட்டும் நிகழ்வு…..
(செல்வி வினாயகமூர்த்தி) இறைவனைவிட்டு இமைப்பொழுதும் நீங்காத வரம் வேண்டும் என்பதற்காக அன்னை இருந்த விரதம் தான் கேதார கௌரி விரதமாகும். அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் தனது இடப்பாகத்தை கொடுத்ததாக புராணகதைகள் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கேதாரகௌரி விரதமானது கடந்த ஐப்பசி மாதம் 15 நாள் ஆரம்பமாகி அக்டோபர் 04ம் நாளானா இன்று தீபாவளித் திருநாளுடன் 21 வது விரத முடிவு நாளான ஐப்பசி அமவாசையில் காப்புக் கட்டுதலுடன் …
மேலும் வாசிக்கஅறநெறி பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் வழங்கி வைப்பு…
-கிஷோர், அபிராஜ்- ஆலையடிவேம்பு பிரதேச அறநெறி பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக அறநெறி பாடசாலை மாணவர்களின் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த அறநெறி பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி …
மேலும் வாசிக்ககண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ”சத்தியம்” அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கிவைப்பு….
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் குடும்ப ரீதியில் 21 மாணவர்கள் பயனடையும் விதத்தில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 10 மின் அழுத்திகள் (மின் துணி தேய்ப்புப் பெட்டி) இன்று (27) புதன்கிழமை வழங்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டமானது பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் நலன்கருதி சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயம் …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்றும் முன்னெடுப்பு… நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்: –ஹரிஸ்- நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அக்கரைப்பற்று இராம கிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்ததுடன் குறித்த …
மேலும் வாசிக்கபாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பம்: ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு. நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கிஷோர் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. நாட்டில் பாடசாலைகள் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (21) ஆம் திகதி முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2 ஆம் கட்டமாக இன்றைய தினம் (25) …
மேலும் வாசிக்க2021 வருட நவராத்திரிவிழா விஜயதசமி பூசை நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இன்று….
இந்துக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களுள் நவராத்திரி விரதம் முக்கியமானதாகும். சக்தியை நோக்கி 9தினங்கள் விரதமிருந்து அனுஸ்டிக்கும் மகத்தானவிரதம். இவ்விரதம் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 09 தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு இன்றைய தினம் விஜயதசமி பூசை நிகழ்வு பல பாகங்களில் இடம்பெற்றது. அந்த வகையில் நவராத்திரிவிழாவின் இறுதிநாள் விஜயதசமி பூசை வழிபாடு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் இன்றைய தினம் (15.10.2021) மாலை வேளையில் இடம்பெற்றது. இன் நிகழ்வு …
மேலும் வாசிக்க