Latest News

Recent Posts

December, 2023

  • 2 December

    “இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023 காரைதீவில்…….

    “இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று (02) காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னிலை அதிதி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்(பொது முகாமையாளர் ராமகிருஷ்ணன் மட்டக்களப்பு ),பிரதம அதிதி திரு.சிந்தக்க அபேவிக்ரம (அம்பாறை அரசாங்க அதிபர்), கௌரவ அதிதிகள் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி. …

    மேலும் வாசிக்க

November, 2023

  • 25 November

    அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் முன் முகப்பு மதில் “சத்தியம்” அமைப்பினால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன்……

    “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளுக்கு உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாணவர்களின் மகிழ்வான சூழலையும் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாகவும் பாடசாலைகளுக்கு மதில் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதனில் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க …

    மேலும் வாசிக்க
  • 24 November

    45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம்

    சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக …

    மேலும் வாசிக்க
  • 23 November

    ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே : சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

    வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா ரூ. 275வில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். சிவப்பு சீனி கிலோ ஒன்று ரூ.330வாக விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சீனியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சில லங்கா சதொச கடைகளில் வெள்ளை …

    மேலும் வாசிக்க
  • 23 November

    வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

    வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார். வட்டுக்கோட்டை, சித்தன்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் …

    மேலும் வாசிக்க
  • 22 November

    பரதநாட்டிய அவதூறு விவகாரம்; மன்னிப்புக் கோரியது உலமா சபை!

    ”மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும்” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் தெரிவித்தார். பரதநாட்டியம் தொடர்பில் மௌலவி ஒருவர் தவறாக பேசிய விடயம் தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு மாளிகாவத்தை ஜம்இய்யதுல் உலமா தலைமைக் …

    மேலும் வாசிக்க
  • 22 November

    லஞ்ச் சீட்டை உண்ணுமாறு கூறிய அதிபரின் கொடூர செயல்

    மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் கல்லூரியில் 11-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் …

    மேலும் வாசிக்க
  • 21 November

    அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான தின நிகழ்வு இன்று…

    அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான தின நிகழ்வு இன்று (21/11/2023) செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதி அதிபர் திரு. ஜெயந்தன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுகளுக்கு வருகை தந்த அதிதிகளை இசை வாத்தியங்கள் இசைத்து மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். இன் நிகழ்விற்கு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் நிர்வாக பிரிவு பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் திரு.S.சுரனுதன் …

    மேலும் வாசிக்க
  • 20 November

    கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல்!

    அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாவி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மதியம் யாழ் போதன வைத்தியசாலையில், சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதனால் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இறப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் …

    மேலும் வாசிக்க
  • 20 November

    மூதூர் பிரதேச லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

    திருகோணமலை மாவட்டம், மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையான கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்க்கும் அதி கஸ்ர குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணி, புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர். திரு.தாமோதரம்பிள்ளை சதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இப் பாடசாலையானது 1985 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதி அதனைத்தொடர்ந்து யுத்த காலப்பகுதியிலும் பாதிப்புக்கு உள்ளான பாடசாலையாகும். தற்போழுதும் இவ் …

    மேலும் வாசிக்க
  • 20 November

    உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

    ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியாவிற்கு 4 மில்லியன் டொலர்களும் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லீக் போட்டியில் வெளியேற்றப்பட்ட அணிகளுக்கும் வெற்றிக்கு ஏற்ற தொகைக்கு மேலதிகமாக ஒருஇலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா (4.28 மில்லியன்) …

    மேலும் வாசிக்க
  • 17 November

    சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

    இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நியமித்தார். அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் …

    மேலும் வாசிக்க
  • 17 November

    புலமை பரிசில் பரீட்சை : 5 மாணவர்கள் அதிகூடிய சித்தி

    இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் அதிகூடிய சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த 5 மாணவர்களும் 198 புள்ளிகளை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின்; வீதம் 15.22வீதம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்க்கது.

    மேலும் வாசிக்க
  • 17 November

    ஆலையடிவேம்பு கல்விக் கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம்….

    2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் நேற்று நள்ளிரவு (16) வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலைகள் ரீதியாக பார்க்கும்போது அறியக்கூடியதாக உள்ளது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று …

    மேலும் வாசிக்க
  • 16 November

    ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

    ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட அதேநேரம் சுமார் 500 பேர் காயமடைந்தனர். தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை உளவுத்துறை உயர் …

    மேலும் வாசிக்க