Latest News

Recent Posts

March, 2024

  • 17 March

    தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…

    இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் இணைந்து கல்வியல் கல்லூரியின் பொறுப்புமிக்க துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு எதிர்வரும் (20.03.2024) புதன்கிழமை அன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ளவுள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம். …

    மேலும் வாசிக்க
  • 15 March

    மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

    மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற அம்பாள் பாலர் பாடசாலை, கனகதுர்க்கா, விவேகானந்தா, விநாயகர் என நான்கு பாலர் பாடசாலைகள் இணைந்து மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (15) பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் கோளாவில் அம்பாள் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், ஆலையடிவேம்பு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோத்தர் ஹரீமா, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திரு.மணிவண்ணன், …

    மேலும் வாசிக்க
  • 13 March

    அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலை புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு….

     -ஹரிஷ், தனுசன்- அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் கோமளம் துளசிநாதன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (13) புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார், அன்னை சாரதா கலவன் பாடசாலையின் முதல் அதிபராக நியமனம் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பி.தணிகாசலம் அவர்கள் கலந்துகொண்டதுடன். நிகழ்வில் பாடசாலை சமூகத்தினரும் கலந்து …

    மேலும் வாசிக்க
  • 11 March

    பிறந்தநாள் வாழ்த்து திரு.ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன்

    அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு.ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன் இன்று (11.03.2022) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். திரு.ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் உறவினர்கள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ்ந்திட Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

    மேலும் வாசிக்க
  • 11 March

    மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

    அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (11) திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை இல்ல மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் …

    மேலும் வாசிக்க
  • 8 March

    பிரதேச மின் நிலைமாற்றிகளுக்கு (Transformer) நடக்கும் அட்டூழியம்….

    ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் மின் நிலைமாற்றிகளில் (Transformer) காணப்படும் புவிக்கம்பி (Earth wire) இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூலமாக அறியக்கூடியக உள்ளது. புவிக்கம்பியினை வெட்டி அகற்றுவதனால் மின் பாவனையாளர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படக்கூடியதாக சாந்தப்பங்கள் அதிகளவாக ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்கள். மின் நிலைமாற்றிகளில் இருந்து புவிக்கம்பி அகற்றப்படுவது தொடர்பாக அனைவரும் விழிப்புடன் இருந்து இவ்வாறு அகற்றப்படுவதனை தடுத்து …

    மேலும் வாசிக்க
  • 7 March

    கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சரோஜாதேவி ஆசிரியரின் பிரியாவிடை நிகழ்வு…

    கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் லோ.சரோஜாதேவி (பவானி) ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் கலந்து ஆசிரியருக்கு ஆசீர்வாதம் வழங்கியதோடு மாணவர்களுக்கு மகா சிவராத்திரியின் பெருமை பற்றி சிறப்புரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கோளாவில் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், …

    மேலும் வாசிக்க
  • 5 March

    ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

    மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் …

    மேலும் வாசிக்க
  • 4 March

    மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

    மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக …

    மேலும் வாசிக்க
  • 2 March

    பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய 50 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கியது மட்டக்களப்பு Rotary கழகம்….

    மட்டக்களப்பு Rotary கழகத்தினரினால் திருக்கோவில் கல்வி வலய பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 50 இடைநிலை பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (02.03.2024) பாடசாலையின் அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

    மேலும் வாசிக்க
  • 2 March

    அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்!

    இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் …

    மேலும் வாசிக்க
  • 1 March

    பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

    2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை …

    மேலும் வாசிக்க

February, 2024

  • 29 February

    ஊருக்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா”

    ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா” ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் மற்றும் ”சத்தியம்”வாழும்போதே வாழ்த்துவோம் (இலண்டன்), அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து நேற்றய தினம் (28) பிற்பகல் 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயப்பிள்ளை தலைமையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது. நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்: கதிரியக்கவியல் வைத்திய …

    மேலும் வாசிக்க
  • 29 February

    அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

    இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மற்றும் தேவையுடைய குடும்பங்களுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 28/02/2024 பாடசாலையின் அதிபர் க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பானது கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு கற்றல் …

    மேலும் வாசிக்க
  • 27 February

    கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு கோளாவில் சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை செய்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…..

    -கிரிஷாந்- கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான நிதிக்காக சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தினை வழங்கி இருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச அருள் மிகு கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக பெருவிழா கடந்த (22.01.2024) அன்று இடம்பெற்று அதனை தொடர்ந்து புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான செயற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் தற்பொழுது …

    மேலும் வாசிக்க