Latest News
Home / ஆலையடிவேம்பு (page 50)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம்  (24.04.2021) சனிக்கிழமை இன்று மாலை தலைவர் திரு கனகரெத்தினம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் இடம் பெற்றது. இவ் பொதுக்கூட்டத்தில் போது ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது. இதன் புதிய தலைவராக திரு.வே.சந்திரசேகரம் ஐயாJp தெரிவு செய்யப்பட்டார். பொதுசெயலாளராக தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன்Jp அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பொருளாளராக ஆ.தர்மதாசJp ஆகியோர் சபையினரால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க

அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில்

வி.சுகிர்தகுமார்  இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சி பெறுவது அவசியமானது என அரச சுற்றுநிருபங்கள் தெரிவிக்கின்றது. இதன் அடிப்படையில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டன. பொது …

மேலும் வாசிக்க

சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம்

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நேற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பிரதேச விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பலத்த விவாதங்களுக்கு மத்தியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ் நிலப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள அதில் தேங்கி இருக்கும் நீர் தடையாகவுள்ளதாகவும் அந்நீரை வெளியேற்ற சின்னமுகத்துவாரம் வெட்டப்பட வேண்டும் என சில …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் சங்காபிசேகமும் ஸ்ரீ ராமநவமி விசேட பூஜைகளும்

  வி.சுகிர்தகுமார்  இலங்கையில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஜந்தடி உயர கற்சிலை அமைந்துள்ள அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் யாக பூஜையும் சங்காபிசேகமும் ஸ்ரீ ராமநவமி விசேட பூஜைகளும் நேற்று(21) நடைபெற்றது. இப் பெருமைமிகு ஆலயத்தின் ஸ்ரீ ராம நவமி இம்மாதம் 12ஆம் திகதி ஸ்நாபினாபிசேகத்துடன் ஆரம்பமாகி நேற்று(21) ஆம் திகதி வருசாபிஷேக தின அஸ்டோத்திர(108) கலச சங்காபிஷேக கிரியைகளுடனும் அன்னதான நிகழ்வுடனும் நிகழ்வுற்றது. இன்று …

மேலும் வாசிக்க

ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு: அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று…

வி.சுகிர்தகுமார்   ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று நடைபெற்றது. மனித நேயத்தை அனைவரும் பின்பற்றுவோம் எனும் தொனிப்பொருளில் அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில்; இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவி சைமன் வாணி மற்றும் திட்ட இணைப்பாளர் …

மேலும் வாசிக்க

மைதான அபிவிருத்தி தொடர்பில் யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கே தமது வாக்குகள்: ஜங்பிளவர் விளையாட்டுக்கழகம்…

வி.சுகிர்தகுமார்   இளைஞர்களும் விளையாட்டுக்கழகங்களும் அரசாங்கத்துடனும் விளையாட்டுத்துறை அமைச்சுடனும் இணைந்து செயலாற்றும்போது மாத்திரமே எமது பிரதேச விளையாட்டுக்கழகங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு இணைந்து செயற்படுகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதுடன்; பிரதேச விளையாட்டு கழகங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் அவரால்; உறுதிமொழி வழங்கப்பட்டது. அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் விசேட வழிபாடு நிகழ்வு….

தஸ்திகாந்த் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்ற வருடத்தினை விடவும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமான மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் வைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளில் கலந்து கொண்டும் பின்னர் நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆலையடிவேம்பு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆலயத்தில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன்  பக்தர்கள் …

மேலும் வாசிக்க

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் மக்கள்

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் வைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். பின்னர் நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் …

மேலும் வாசிக்க

அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள பிலவ புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  மலர்ந்த இவ் தமிழ், சிங்கள பிலவ புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள சார்வரி புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த தமிழ், சிங்கள பிலவ வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர ஆலையடிவேம்புவெப் இணையத்தளம் சார்பாக வாழ்த்துகின்றோம். மேலும் இவ் புதுவருடத்தினை வீட்டிலிருந்து …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சியுடன் தயராகி வருவதுடன்: இன்றைய தினம் கோழி இறைச்சியின் விலை 850/-

இன்று காலைமுதல் அதிகளவான மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாட்டத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் ஆடைகளையும் கொள்வனவு செய்து வந்தனர். மேலும் மக்கள் அதிகளவானவர்கள் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆடை நிலையங்களில் குவிந்து காணப்பட்டதுடன் சந்தையிலும் அதிகளவான மக்கள் அத்தியாவசியமான பொருட்கள் கொள்முதல் செய்தமையினையும் காணக்கூடியதாக இருந்தது. மேலும் ஆலயங்களில் இன்றைய தினம் மருத்து நீர் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது. மேலும் இந்த பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி 1kg ஆனது …

மேலும் வாசிக்க