திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் குடும்ப ரீதியில் 21 மாணவர்கள் பயனடையும் விதத்தில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 10 மின் அழுத்திகள் (மின் துணி தேய்ப்புப் பெட்டி) இன்று (27) புதன்கிழமை வழங்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டமானது பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் நலன்கருதி சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயம் பிரதேசத்தில் காணப்படும் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கல்வி சார்ந்து மற்றும் பௌதீகவள அபிவிருத்தி சார்ந்து வழந்துவரும் ஒரு பாடசாலையாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை பாடசாலை மாணவர்களில் மின்சார வசதி இருந்தும் மின் அழுத்திகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக தங்கள் அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கி வைத்து உதவிய “சத்தியம் வாழும்போதே வழங்கிடுவோம்” அமைப்பு மற்றும் அதன் ஸ்தாபகர் திரு K. சத்தியமூர்த்தி ஐயா அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றார்.