Latest News
Home / ஆலையடிவேம்பு / கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ”சத்தியம்” அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கிவைப்பு….

கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ”சத்தியம்” அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கிவைப்பு….

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் குடும்ப ரீதியில் 21 மாணவர்கள் பயனடையும் விதத்தில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 10 மின் அழுத்திகள் (மின் துணி தேய்ப்புப் பெட்டி) இன்று (27) புதன்கிழமை வழங்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டமானது பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் நலன்கருதி சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயம் பிரதேசத்தில் காணப்படும் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கல்வி சார்ந்து மற்றும் பௌதீகவள அபிவிருத்தி சார்ந்து வழந்துவரும் ஒரு பாடசாலையாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை பாடசாலை மாணவர்களில் மின்சார வசதி இருந்தும் மின் அழுத்திகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக தங்கள் அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கி வைத்து உதவிய “சத்தியம் வாழும்போதே வழங்கிடுவோம்” அமைப்பு மற்றும் அதன் ஸ்தாபகர் திரு K. சத்தியமூர்த்தி ஐயா அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றார்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *