-கிரிசாந் மகாதேவன்-
படங்கள்: –ஹரிஸ்-
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அக்கரைப்பற்று இராம கிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்ததுடன் குறித்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாடானது சுகாதார நடைமுறைகளுடன் சிறந்த முறையில் இடம்பெற்றது.
மேலும் நாளை (27) பி.ப 2.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை கோளாவில் விநாயகர் வித்தியாலயம் மற்றும் திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தவும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாடானது க.பொ.த சாதாரண மாணவர்கள் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.