Latest News
Home / ஆலையடிவேம்பு (page 44)

ஆலையடிவேம்பு

திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு …

  -காந்தன்- அரசாங்கத்தின் கொள்கைச் சட்டகமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் பிரதமரும் புத்தசாசன மத விவகார மற்றும் “கலாசார அமைச்சருமாகிய கெளரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்து சமய கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கென திணைக்களத்தினால் நிதி உதவி வழங்கப்படும் ஆலயங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு. அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட சாகாம வீதியின் பனங்காட்டு பாலம் வரையிலான காப்பட் பாதையை பாதுகாக்கும் முகமாக பராமரிப்பு பணி முன்னெடுப்பு…

-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கபிஷன் அக்கரைப்பற்று தமிழ் பிரிவு, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரைப்பற்றில் இருந்து சாகாமம் நோக்கி செல்லும் சாகாம வீதி என அழைக்கப்படும் பனங்காட்டு பாலம் வரையிலான காப்பட் பாதையின் (Shoulder) என அழைக்கப்படும் பாதையின் இரு மருங்கு பகுதிகள் ஆங்காங்கே அரிப்படைந்ததாக (Erosion) காணப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச பற்றாளர் ஒருவரினால் முகநூல் பதிவொன்று மூலமாக பலர் கவனத்திற்கு கொண்டு சென்று …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் இன்று அகற்றப்பட்டது: மக்கள் மகிழ்ச்சி….

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக வீதி ஓரங்களில் காணப்பட்ட மின்கம்பங்கள் மூலமாக கடந்த காலங்களில் மக்களின் உயிரிழப்பும், வாகன விபத்துகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய நிலையில் அப்பாதையில் மீன்சந்தை, வைத்திய கிளினிக் நிலையம் மற்றும் கடைத்தொகுதிகள் அமைந்துள்ளதால் மக்கள் நடமாட்டமும் வாகன நெரிசலும் அதிகமாக காணப்படுவதுடன் குறித்த மின்கம்பங்களால் ஆபத்து தன்மை அதிகளவில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய முன் நகர்வுகள் இன்றைய நிலை!

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்படுகின்ற நிலையில். ஆலையடிவேம்பு பிரதேச தன்னார்வம் கொண்டவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பவர்களினால் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு ஜூன் மாதம் முற்பகுதியில் இருந்து …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை….

-கிரிசாந் மகாதேவன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் சித்திரப்பாட ஆசிரியர் தா.சந்திரகுமார் அவர்கள் பாடசாலையின் மதில்களை அழகுபடுத்தும் சுவரோவியங்களை வரைந்து வருகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை பிரதேசத்தில் காணப்படும் அதிகஷ்ட பிரதேச …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக: மீதமுள்ள தடுப்பூசிகள் நாளை…

-கிரிசாந் மகாதேவன்- 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அவர்களின் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 5,000 சினோபாம் தடுப்பூசிகளை மூன்று …

மேலும் வாசிக்க

நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: MOH ஆலையடிவேம்பு.

-கிரிசாந் மகாதேவன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும் மேலும் பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் ஆகும். அந்த வகையில் எமது பிரதேசத்தில் நாளை (30.08.2021) அதாவது திங்கள்கிழமை முதல் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத (முதலாவது …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி தொடர்வன முக்கிய அறிவித்தல்….

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு 26.08.2021 வியாழக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு தடுப்பூசி ஏற்றலுக்கான நடவடிக்கைகள் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, 60 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இத்தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அக்கரைப்பற்று 07 அக்கரைப்பற்று 07/1 அக்கரைப்பற்று 07/2 அக்கரைப்பற்று 07/3 அக்கரைப்பற்று 07/4 அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க

யானைகள் அட்டகாசம்! ஆலையடிவேம்பு பிரதேச வாச்சிக்குடா பிரிவை துவம்சம் செய்த யானைகள்: நிரந்தர தீர்வு கோரி மக்கள்….

-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு வாச்சிக்குடா பகுதியில் தோட்ட நிலங்களுக்குள் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேலைகளில் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயந்தகு தென்னை, வாழை மரங்கள் மற்றும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. வாச்சிக்குடா பகுதியை அண்மித்து மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை செய்கையின் அறுவடை முடிவடைந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் மனிதர்கள் நடமாட்டம் இன்மை போன்ற விடையங்களை சாதகமாக கொண்டு இலகுவாக இரவு வேளையில் கிராமத்தினுள் யானைகள் உட்புகுந்து …

மேலும் வாசிக்க

பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும் : பல தரப்பு முயற்சிகளால் கிடைத்த தீர்வு….முழு விபரம்….

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதனால் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பணிக்கு வராமை காரணமாக நான்கு நாட்களாக வைத்தியசாலை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வைத்திய சேவை வழங்கிவருகின்ற பனங்காடு பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டு இருந்தமை காரணமாக …

மேலும் வாசிக்க