கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க …
மேலும் வாசிக்கமழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் – 200 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி
இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமென அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் “கிழக்கு, ஊவா, வடமத்திய, …
மேலும் வாசிக்கமார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவு வரும் என்கின்றார் சுமந்திரன் எம்.பி.!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரேரணையைத் தீர்மானமாகநிறைவேற்றிய நாடுகளுடன்நாம் இப்போதே பேச்சுகளைஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச்மாதத்தில் நல்லதொரு முடிவைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம். – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.எ. சுமந்திரன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – ஜெனிவா விவகாரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். …
மேலும் வாசிக்கஎதிர்க்கட்சி விவகாரம் – சஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மஹிந்த
எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவாராக இருப்பின் அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே தமது தேர்தல் கொள்கை பிரகடனம் காணப்பட்டதென்றும் அதே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ மகாபோதி ருவன்வெளிசாய, மிரிஷ்வெடிய, ஜயன்தி விஹார ஆகிய விகாரைகளில் மத வழிப்பாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே …
மேலும் வாசிக்கயாழ். பல்கலை வளாகத்துள் நுழைந்த அதிரடிப்படை, பொலிஸார் – ஏற்பட்ட திடீர் பதற்றம்
சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் சில நிமிடங்களில் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் வேடிக்கை பார்த்ததுடன், அவர்களை உள்ளேவிட்டு பிரதான வாயிலையும் மூட மறுத்தனர் …
மேலும் வாசிக்கதமிழர்களுக்கான தீர்வு அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இல்லை – மாவை எம்.பி.
கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சினை கூட குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் நல்லிணக்கம் குறித்து பேசிய மாவை சேனாதிராஜா, நல்லிணக்கம் என்பது அரசாங்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் …
மேலும் வாசிக்ககல்முனை பிரதேசத்தில் வெள்ளம் பாதித்தோருக்கு கோடீஸ்வரன் எம்.பி. நிவாரண உதவி!
கல்முனையில் வெள்ளம் பாதித்தோருக்கு கோடீஸ்வரன் எம்.பி. நிவாரண உதவி! கல்முனைப் பிரதேசத்தில் தொடர்ந்துபெய்த அடைமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், வெள்ளம் பாதித்த மக்களை சில நாள்களுக்கு முன்னர் நேரில் சென்று பார்வையிட்டமையுடன், அவர்களின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்து வெள்ளநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தார். இன்று கல்முனைப் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் …
மேலும் வாசிக்கஐ.நா.வில் இலங்கை குறித்த பிரேரணை: இப்போதே நாடுகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம் – சுமந்திரன்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் தாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நகர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவைக் கொண்டுவரும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை …
மேலும் வாசிக்கஅம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு
அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதாகவும், தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி …
மேலும் வாசிக்கமழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று …
மேலும் வாசிக்க