Latest News
Home / இலங்கை (page 420)

இலங்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் – கோட்டா, மஹிந்த உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பள உயர்வினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்தோடு இதற்கான நடவடிக்கைகளை விரைவில் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த அறிவிப்பு தொடர்பாக நாளை உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை இன்று காலை தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மலையக …

மேலும் வாசிக்க

பொதுமக்களுக்கு 7 நாட்கள் காலக்கெடு விதித்தது பாதுகாப்பு அமைச்சு!

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு விதித்துள்ளது. அந்தவகையில் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 7 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு 09 ஆம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய முப்படை உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் …

மேலும் வாசிக்க

சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது – ஞானசார தேரர்

இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை …

மேலும் வாசிக்க

‘ஜெனிவா’வில் அரசுக்கு காத்திருக்கிறது ஆபத்து – சந்திரிகா ஆரூடம்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது. எனவே, இம்முறை ஜெனிவாவில் கோட்டாபய அரசு எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.” – இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் …

மேலும் வாசிக்க

தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர்

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு நல்லது என்றாலும், இதனை தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான குரல் …

மேலும் வாசிக்க

பதவியை ராஜினாமாச் செய்வதாக வாசுதேவ அறிவிப்பு?

மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு உரிய  தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. மேலும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு கடந்த அரசாங்கம் …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் அம்புயூலன்ஸ் வண்டியிலேயே குழந்தையை பிரசுவித்த தாய்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் அமைந்துள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின்போது தாய் ஒருவர்  அம்புயூலன்வண்டியிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (11ம் திகதி) இரவு இடம்பெற்றுள்ளது. கரடியனாறு பிரதேசத்திலுள்ள தும்பாலை எனும் கிராமத்திலிருந்து தாய் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவர்கள் 1990 இலவச அம்புயூலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது கரடியனாறு பிரிவிலுள்ள  அம்புயூலன்ஸ் வண்டி வேறு சேவையில் ஈடுபட்டதனால் வவுணதீவு நிலையத்தின்  அம்புயூலன்ஸ் வண்டி …

மேலும் வாசிக்க

தமிழ் அரசியல் தலைமையை என்னிடம் தாருங்கள் – ஆனந்தசங்கரி!

தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது …

மேலும் வாசிக்க

திருமண வீட்டுக்கு சென்று குடும்பங்களை உடைப்பது குறித்து பேசிய ரணில்!

திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை மற்றும் உறவுகளை இணைக்கச் செய்யப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் கலந்துகொண்டு குடும்பங்களை உடைப்பது குறித்து பேசியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளின் திருமண நிகழ்வின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த உரையாடலை …

மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத்தில் வாழும் தம்பதிகளுக்கு அடித்தது மகாயோகம்…மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால்…!

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா மானியமாக வழங்க முன்வந்துள்ளபோதும் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என வல்வெட்டித்துறை நகர பிதா தெரிவித்துள்ளார். …

மேலும் வாசிக்க