-காந்தன்- பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நாட்டிலுள்ள இந்து ஆலையங்கலில் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் காரைதீவு அறங்காவலர் சபையினால் காரைதீவு அரசடி பிள்ளையார் ஆலயத்தில் அகழ்விழக்கு ஏற்றி கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. உலகிலே எங்காவது ஒரு …
மேலும் வாசிக்கதிருக்கோவில் பிரதேசத்திற்கு காணி அமைச்சர் S.M.சந்திர சேன அவர்கள் விஜயம்: அரச காணியில் வசித்துவரும் குடுபங்களுக்கு காணி அனுமதி பத்திரம் இன்று வழங்கிவைப்பு….
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 04 கிராம சேவகர் பிரிவில் அரச காணியில் வசித்துவரும் குடுபங்களுக்கு காணி அனுமதி பத்திரம் காணி அமைச்சர் S.M.சந்திர சேன அவர்களினால் வழங்கிவைப்பு…. அதி மேதகு ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத்திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு கிராமம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 04காம் …
மேலும் வாசிக்ககிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி . நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு திருக்கோவில் வலயக்கல்வி பணிமனையில் இன்று….
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்து கல்வி வலயத்தினை உயர்த்துவதற்காக முழுமூச்சாக பாடுபட்டு தற்போது கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றிருக்கும் திருமதி . நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வானது திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் தலைமையில் இன்றைய தினம் (28) வியாழக்கிழமை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது . இந் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், …
மேலும் வாசிக்கஒரே நாடு ஒரே சட்டம் – முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடம் தமிழர்கள் இல்லை!
ஞானசார தேரர் என்பவர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டிக்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வௌியில் வந்ததுடன் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்ட ஒருவர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்பட்டி பட்ட ஒருவரை நியமித்து ஒரு நாடு ஒரு சட்டம் என்று வைத்தால் அதில் பெயருக்கு கூட ஒரு …
மேலும் வாசிக்கநனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்று நாட்டிற்கு..!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தொகுதி இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம், ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் விவசாயிகளுக்கு பொருத்தமான கிருமிநாசினியை வழங்குவதற்கு அறிவியல் ரீதியில் ஆராய்வது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 24ஆம் திகதி இந்தியாவில் …
மேலும் வாசிக்கஇலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு!
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையின் பல மூத்த அதிகாரிகளை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, …
மேலும் வாசிக்கஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்
ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அம்பாறை உத்தியோகபூர்வ விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கல்முனை கடற்றொழில் திணைக்களத்தில் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹறீஸ் மற்றும் கடற்றொழிலாளர் அமைப்புக்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள …
மேலும் வாசிக்க‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தமிழ் மக்களுக்கு எதிரானதா?
´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்னும் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் …
மேலும் வாசிக்கஇலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லத் தடை?
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்பூசி தன்னார்வத் தடுப்பூசி என்பதால் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் வற்புறுத்த முடியாது. எனினும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்கள் நுழைய தடை விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு தனிநபருக்கு தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள …
மேலும் வாசிக்கஇரு நாட்களுக்கு முழுமையாக இருளில் மூழ்கவுள்ள இலங்கை?
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதன்படி நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையில் நடந்த பேச்சில் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர். கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க …
மேலும் வாசிக்க