எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதேநேரம் உணவகங்கள் அதிகபட்சம் 50% செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்கதினமும் ஐயாயிரம் தொற்றாளர்கள், 250இற்கு அதிகமான மரணங்கள்!
தினமும் 5ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதோடு, 250ற்கு அதிகமான மரணங்கள் பதிவாவதாக வைத்தியசாலைகளில் இருந்து உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இவ்வாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையிலேயே இது கூறப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் காணப்படுகின்றமை இதன்மூலம் புலனாவதாகவும் நிலைமை உக்கிரம் அடைந்துள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் உயிர்கள் மிகவும் பெறுமதியானது என்பதால், நிபுணர்களது ஆலோசனைகளை …
மேலும் வாசிக்ககொரோனா என்பதற்கு காய்ச்சல், தடிமன் என்பது மட்டுமல்ல அறிகுறி
கொரோனா என்பதற்கு காய்ச்சல், தடிமன் என்பது மட்டுமல்ல அறிகுறி. வயிற்றோட்டம், மூச்சுத்திணரல், மூக்கடைப்பு ,மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும் அதற்கு அறிகுறியாகவே கொள்ளப்படுமென பொது வைத்திய நிபுணர் கஜந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. உலகத்திலும் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் டெல்டா …
மேலும் வாசிக்கநெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி!
நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பொருட்கள் வரி சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கருவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு 100 ரூபாய் வரியும் வெந்தயம் ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாய் வரியும் குரக்கன் மா ஒரு கிலோவிற்கு 150 ரூபாய் வரியும் …
மேலும் வாசிக்கஅதிகபட்ச கட்டணத்தை மீறினால் அழைக்க விஷேட இலக்கம்
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பி.சி.ஆர் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபாவாக விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கட்டணம், நேற்று மாலை முதல் நடைமுறையில் உள்ளதுடன், இந்த பரிசோதனைகளுக்கு இதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படால், 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் …
மேலும் வாசிக்கபயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று …
மேலும் வாசிக்கஇரண்டாவது நாளாக 3,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
நாட்டில் மேலும் 760 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரை 3,142 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 348,260 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் …
மேலும் வாசிக்கதொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துங்கள்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் அதிக சதவீதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்ட, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, …
மேலும் வாசிக்கஇன்று (13.08) நள்ளிரவு முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள்!!
இன்று (13.08.2021) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (13.08) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், துறைமுகம், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று …
மேலும் வாசிக்கஎரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த தினத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் LP எரிவாயு தேவையில் சுமார் 5% தை உற்பத்தி செய்யும் நிலையில் இந்த தயாரிப்புகளை லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு சமமாக வழங்குகிறது. மின்சக்தி …
மேலும் வாசிக்க