Latest News
Home / ஆலையடிவேம்பு (page 40)

ஆலையடிவேம்பு

சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக உள் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையும் பணி “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் முன்னெடுப்பு….

சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலையில் கவடாப்புட்டி , புளியம்பத்தை , பனங்காடு , மகாசத்தி கிராமத்தைச் சேர்ந்த பல குழந்தை மாணவர்கள் படித்து வருகின்றனர். இவ் அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் நீண்ட கால தேவையாக இருந்த அடிப்படை வசதிகளையும் , மாணவர்களுக்கு கல்வி கற்றலுக்குரிய சிறப்பான ,  மகிழ்வான சூழலையும் ஏற்படுத்தி மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக உள் …

மேலும் வாசிக்க

கருங்கொடித்தீவு குளக்கரையில் பெரிய பிள்ளையாரின் பெருங்கதை ”தீர்த்தம் உற்சவம்” மற்றும் “குருக்கள் அழைப்பு” வைபவமும் சிறப்பான முறையில் இன்று….

அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் பெருங்கதை விரத நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்று வந்த நிலையில். நேற்றய தினம் (09) மாலை சிறப்பான முறையில் விநாயகர் பெருங்கதை விரத நிகழ்வின் கஜமுகாசூரசம்காரம் சிறப்பான முறையில் இடம்பெற்றது. மேலும் இன்றைய தினம் (09) காலை வேளையில் கருங்கொடித்தீவு குளக்கரையில் பெரிய பிள்ளையாரின் பெருங்கதை உற்சவ தீர்த்தம் சிறப்பாக இடம்பெற்றதுடன். பண்டு தொட்டு தொடரும் பாரம்பரிய விழுமியங்களில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (05) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.த.இராசநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.ந.புள்ளநாயகம் (மாகாணக்கல்விப் பணிப்பாளர் – கிழக்கு மாகாணம்) , விசேட அதிதியாக திரு.யோ.ஜெயச்சந்திரன் (வலயக்கல்விப் பணிப்பாளர்- திருக்கோவில்) அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள் , கௌரவ அதிதி , பாடசாலை …

மேலும் வாசிக்க

இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக வெற்றி பெற்று பதங்கங்களை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு….

-காந்தன்- 33 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக 20 வயதின் கீழ்ப்பிரிவில் பங்குபற்றி மாணவர்கள் வெற்றி பெற்று பதங்கங்களை பெற்று இருந்தனர். குறித்த போட்டி நிகழ்வுகளில் 20 வயதிற்குற்பட்ட பிரிவில் ஆண்களுக்கான 100 மீட்டர் , 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் N.றுக்சன் வெள்ளிப் பதக்கங்களையும், பெண்களுக்கான உயரம் பாய்தல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் …

மேலும் வாசிக்க

தேவகிராமத்திற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

  அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தேவகிராம (அளிக்கம்பை) மக்கள் சுத்தமான குடிநீருக்காக பரிதவிக்கும் நிலையினை கருத்திற்கொண்டு அங்குள்ள பொதுக்கிணற்று நீர் வளத்தை பயன்படுத்தி அதனை சுத்திகரிப்பு செய்து தொடர்ச்சியாக வழங்கும் நோக்கிலான மணித்தியாலயத்திற்கு 500 லீற்றர் நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் இயந்திரத் தொகுதியை பொருத்துவதற்கான நிலையப் பணிகள் இன்றைய தினம் (29.11.2021) சிவன் அருள் பவுண்டேசனால் அமரர். சற்குணநாதன் மங்களேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமாக …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்த்தில் பொலிஸ் உபநிலையம் இன்று திறந்து வைப்பு: நிலையத்தின் பெயரினால் மக்கள் மனக்குழப்பத்தில்.

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் உபநிலையம் ஒன்று இன்று (29.11.2021) திறந்துவைக்கப்பட்டது. குறித்த உப பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களினால் நாவற்காடு பிரதேசத்தில் காணப்படும் நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து …

மேலும் வாசிக்க

கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும் பணி மும்முரமாக முன்னெடுப்பு…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும்பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் ஏற்பாட்டில் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைத்து பாடசாலையின் பௌதீக சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. “சத்தியம் “ (லண்டன்) வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீதிகளில் தேங்கிய வெள்ள நீர்: ஆலையடிவேம்பு பிரதேச சபையினரினால் வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு….

-கிரிசாந்- வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (25) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள நீரானது வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கியமையால் மக்களுக்கு பெரும் அசௌகரியமான நிலை ஏற்பட்டது. இதனை நிவர்த்தி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச அளிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச அலிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று (23) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன் தலைமையில்  திறந்து வைக்கப்பட்டது. அலிக்கம்பை பிரதேச மக்களின் நீண்ட நாள் வைத்திய தேவை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக குறித்த ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு பலரும் அதிதிகளாக கலந்து …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான ATM இயந்திரம் பொருத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்.

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்பட்டுவந்த நிலையில். தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிறுவிட வேண்டும் என பிரதேச மக்களின் பலரது கூட்டு முயற்ச்சி காரணமாக தற்போது ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை …

மேலும் வாசிக்க