திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (05) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.த.இராசநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.ந.புள்ளநாயகம் (மாகாணக்கல்விப் பணிப்பாளர் – கிழக்கு மாகாணம்) , விசேட அதிதியாக திரு.யோ.ஜெயச்சந்திரன் (வலயக்கல்விப் பணிப்பாளர்- திருக்கோவில்) அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள் , கௌரவ அதிதி , பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் கல்வி திறன் வகுப்பறை செயத்திட்டத்திற்கு “Oru Pannai Education” அவர்கள் கொடையாளர்களாக காணப்படுவதுடன் குறித்த நிகழ்வானது சுகாதார முறைகளுடன் கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது