Latest News
Home / இலங்கை / பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 27/03/2024 பாடசாலையின் அதிபர் ச. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவியினை வழங்கி வருகின்றது.

மேலும் இன் நிகழ்வில் அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன், பட்டிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அருள் ராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்களான பே. கணேசலிங்கம், சீ.விஜிதா, ந. கௌசளா ஆகியோர் மற்றும்
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான, சி.காந்தன், சி.துலக்சன், A.M.ரிஸ்வான்
ஆகியோர் கலந்து கொண்டு 21 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *