ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.உ.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலை பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு (2022.11.22) இன்று செய்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. அண்மைக்காலமாக பாடசாலைகளில் மாணவர்களின் எதிர்காலத்தினை சவாலுக்குட்படுத்தியதாக சிறுவர் துஸ்பிரயோகங்கள், போதைவஸ்து தாக்கங்கள், பிறழ்வான நடத்தைகள் போன்ற சில சம்பவங்கள் இடம் பெற்று வருவதினை …
மேலும் வாசிக்க“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் மறுசீரமைப்பு…
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா முழுவதுமாக புதுப்பொலிவுடன் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்கா மறுசீரமைப்பிற்கு சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் அவர்கள் காரணமாக இருப்பதுடன் இவரின் தொடர் …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு…
யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (18.11.2022) வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் கழகத்தின் தலைவர் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று, ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இன் நிகழ்வுக்கு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் V.பாபகரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் T. த.கிறோஜாதரன், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச கிராம நிலத்தாரி என பலர் …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும்….
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (19/11/2022) சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் தாராளர் இறைபணிச் செம்மல் த.கயிலாயபிள்ளை J.P (ஸ்தாபகர், தலைவர் இந்து இளைஞர் மன்றம், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம், அக்கரைப்பற்று) மற்றும் தலைவர் திரு கே.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) …
மேலும் வாசிக்கபிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் திருக்கோவில் வலயக்கல்வி பகுதிற்கு உற்பட்ட புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் இலவசமாக வழங்கி வைப்பு….
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் பி. பரமதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களும், இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டு, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 38 பாடசாலைகளைச் …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் எதிர்வரும் 20 ஆம் திகதி இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம் முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 076 888 7835 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தங்களது பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினை அனுப்பி வைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இரத்த தானம் …
மேலும் வாசிக்க2023 ஆம் ஆண்டுக்கான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது….
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் 14 மேலதிக வாக்குகளால் பாரிய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சபையின் அமர்வு நேற்று (10/11/2022) புதன்கிழமை தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் இடம்பெற்றதுடன். 16 உறுப்பினர்கள் கொண்ட சபையில் ஒருவர் அமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் கலந்து கொண்ட 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவாகவும் ஒருவர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இதன் மூலம் 14 மேலதிக வாக்குகளால் …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச கலை இலக்கிய போட்டி – 2022 இல் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்ற திருமதி.லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி….
கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய போட்டி – 2022 இல் கவிதை, சிறுவர் கதை, சிறுகதை, பாடலாக்கம் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக்கொண்டமைக்காக திருமதி. லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை கௌரவித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பாபாகரன் அவர்கள் தலமையில் அண்மையில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. திருமதி. லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிரதேச கலை இலக்கிய போட்டியில் சிறுகதை, …
மேலும் வாசிக்ககண்ணகி கிராமத்தில் யானை அட்டகாசம்! குடும்பபெண் ஒருவர் உயிரிழப்பு: 03 வீடுகளுக்கு பாரிய சேதம் – சோகத்தில் கண்ணகி கிராம மக்கள்….
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை 03.00 மணியளவில் காட்டு யானை ஒன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்நுழைந்து அட்டகாசம். யானை தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான 32 வயது (திருமதி.சிவகரன் சுலச்சனா) குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இரண்டு பிள்ளைகளின் மூத்த பிள்ளைக்கு 11 வயதும், மற்றய பிள்ளை 05 வயதும் உடையவர் ஆவர். மேலும் 03 …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் 2023ம் ஆண்டிற்கான பஞ்சாங்க கலண்டர் வெளியீடு…..
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் வருடத்துக்கான அதாவது 2023ம் ஆண்டிற்கான பஞ்சாங்க கலண்டரானது இன்று (08/11/2022) ஆலய நிர்வாகத்தினர் தலமையில் ஆலய வளாகத்தில் வெளியிடப்பட்டது. குறித்த பஞ்சாங்க கலண்டரை பிரதேச அடியார்கள் அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் ஆலய திருப்பணிச்சபையினர் பிரதேச இல்லங்களை நாடிச்சென்று பஞ்சாங்க கலண்டரை வழங்கவும் தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க