Latest News
Home / ஆலையடிவேம்பு (page 18)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா- 2023

அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா நிகழ்வானது விநாயகர் வழிபாடு, கிராமசந்தி வாஸ்துசாந்தி எனும் கிரிகைகளுடன் நேற்று (26/03/2023) ஆரம்பமாகியாது, மேலும் இன்றைய தினம் (27/03/2023) திங்கட்கிழமை திருக்கொடியேற்றம் நிகழ்வு பக்திபூர்வமாக சிறந்த முறையில் இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா நிகழ்வுகள் தினமும் பகல் நிகழ்வுகள் மற்றும் …

மேலும் வாசிக்க

48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் ஜொலிபோய்ஸ் மற்றும் சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை….

15ம் கிராமம் செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக சிறப்பாக நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று பிரதேச ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. மேலும் துரதிஸ்டவசமாக சம்பியன்ஸ் விளையாட்டுக்கழம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இறுதிப்போட்டியின் சிறப்பாட்ட நாயகனாக ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் டிலக்சன் அவர்களும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி நேற்றய தினம் (26) முன்னெடுக்கப்பட்டது. குறித்த சிரமதான பணிகள் Youngflowers விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு திறன்பட சிறந்தமுறையில் முன்னெடுத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க

அம்பாறை மாவட்ட தமிழ் இலக்கியப் பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம் இன்று அக்கரைப்பற்றில்….

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 08ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட தமிழ் இலக்கியப் பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் இன்று (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அக்கரைப்பற்று, விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் திரு K.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர்) அவர்களின் தலைமையில் சமூகத்திற்கு பயன்மிக்கதாக மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது. இதன் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம்….

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அக்கரைப்பற்று, விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் திரு K.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர்) அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது. இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவையினால் …

மேலும் வாசிக்க

கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த தை மாதம் (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் நேற்றய தினம் (22) புதன்கிழமை ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் இருந்து 05 ஆம் …

மேலும் வாசிக்க

மகா சக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் 2023ம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்ட 21வது வருடாந்த பொதுச்சபை கூட்டம்….

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கி வருகின்ற வரைவுள்ள மகா சக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் 2023ம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்ட 21வது வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை மகாசக்தி கலாசார மண்டபத்தில் சங்கத்தலைவி திருமதி.பியசேன மங்கையர்க்கரசி தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாப், M. I. M. பரீட் தலைமை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற தீப்பந்த போராட்டம்….

அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக மின் கட்டண அதிகரிப்பு, நீர் கட்டண அதிகரிப்பு, அரச ஊழியர்களின் வரிச்சுமை, அரசாங்கத்தின் ஊழல் மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற வாசக பதாதைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியவாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற போராட்டம் இன்று (18) மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா

அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா நிகழ்வு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பரிபாலனசபையினர் தலையில் இன்று (17) காலை 10.00 மணியளவில் புளியம்பத்தை விளாவடி வயல் பகுதியில் சிறந்த முறையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பாபாகரன் அவர்கள் கலந்துகொண்டதுடன் கலாச்சார உத்தியோகத்தர், கிராம சேவகர் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் ஆலய …

மேலும் வாசிக்க

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.. இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை …

மேலும் வாசிக்க