சர்வதேச மகளிர் தினம் மார்ச் 08ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட தமிழ் இலக்கியப் பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் இன்று (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அக்கரைப்பற்று, விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் திரு K.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர்) அவர்களின் தலைமையில் சமூகத்திற்கு பயன்மிக்கதாக மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
இதன் போது ”இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள்? மதிக்கப்படவில்லை?” எனும் தலைப்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள் சமூகத்திற்கு தேவையான முக்கிய படிப்பினைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இடம்பெற்றது.
பட்டிமன்றத்தின் நடுவராக இறைபணிச் செம்மல் திரு. த. கயிலாயபிள்ளை J.P அவர்களும் பட்டிமன்ற பேச்சாளர்களாக கலாநிதி அனுசூயா சேனாதிராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்களம்), தேசமானிய திரு. S. மணிவண்ணன் (அதிபர், கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் மற்றும் அகில இலங்கை சமாதான நீதிவான்), திரு.கே.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு), திரு. V. குணாளன் (ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்), திரு. N. செல்வநாதன் (ஓய்வு நிலை விரிவுரையாளர்), திரு.தா.ஜெயாகர் (சமாதான நீதிவான், குளோபல் நிறுவனத்தின் இயக்குனர்) அவர்களும் கலந்துகொண்டு பட்டிமன்றத்தில் தங்கள் தலைப்புகளுக்கு பொருத்தமான சிறந்தமுறையில் வாதிட்டும் இருந்தார்கள் .