கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கி வருகின்ற வரைவுள்ள மகா சக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் 2023ம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்ட 21வது வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை மகாசக்தி கலாசார மண்டபத்தில் சங்கத்தலைவி திருமதி.பியசேன மங்கையர்க்கரசி தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாப், M. I. M. பரீட் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (கல்முனை ) அவர்களும், ஜனாப். M.C.M ஜலால் டீன் அவர்களும், ஜனாப், U.L.M. பௌஸ், அவர்களும்,
கெளரவ அதிதிகளாக திரு. திரு.க.நவரத்தினம் உபதலைவர், மகாசக்தி, திருமதி. க. தர்ஷினி பொருளாளர், மகாசக்தி, இயக்குனர் சபை உறுப்பினர்களாக திருமதி.வி. பிரகலாதவி அவர்களும், திருமதி.சு.துஸ்யந்தி, திருமதி.ப. நவநிதா,செல்வி.சி.மோகனா அவர்களும் கலந்து கொண்டனர்.
சங்கச்செயலாளரும், முகாமையாளருமான திரு.ச.திலகராஜன் அவர்களின் நன்றியுறையுடன் கூட்டம் நிறைவுபெற்றதும் குறிப்பிடத்தக்கது.