முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இ. த. க.வித்தியாலயம், நெடுங்கேனி மு/தண்டுவான் அ. த. க. பாடசாலைகளில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிகழ்வானது இரு பாடசாலையின் அதிபர்களான திருமதி. வே. நித்தியகலா மற்றும் திரு. கு. பஞ்சலிங்கம் அதிபர்களின் தலைமையில் (14) காலை 10.00 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் கிராம சேவகர் திருமதி.லலிதா நிவேகாந்தன்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.கி. …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (15) ஆரம்பம்…..
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரப்பெருவிழா நிகழும் சோபகிருது வருடம் புரட்டாதித்திங்கள் 28ம் நாள் (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை சுபமுகூர்த்த சுபவேளையில் கங்கையரட்டுதல் நிகழ்வுடன் ஆலயத்தில் கணபதி ஹோமமும் இடம்பெற்று மாலை அம்மனின் திருக்கதவு திறத்தலுடனும் பெருவிழா ஆரம்பமாக இருக்கிறது. மேலும் ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (25.10.2023) காலை இடம்பெற இருப்பதுடன் மற்றும் ஆயுத பூசையுடனும் இப் பெருவிழா இனிதே நிறைவடையவும் இருக்கின்றது.
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை (15) அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்…..
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழாவானது நிகழாண்டு சோகங்கள் நீக்கிடும் சோபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 28ஆம் நாள் (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ விழா இடம்பெற இருக்கிறது. மேலும் ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (24.10.2023) காலை 05.30 மணிக்கு …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகத்தினரால் 400 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் இலவச கருத்தரங்கு….
அக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகத்தினரால் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் இலவச கருத்தரங்கு நேர்த்தியான ஒழுங்குபடுத்தலுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நேற்றய தினம் (08) ஞாயிற்றுக்கிழமை மருது விளையாட்டு கழகத்தின் நிர்வாக தலைவர் திலீபன் மற்றும் அணித்தலைவர் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த இலவச கருத்தரங்குக்கு மருது விளையாட்டு கழகத்தின் செயலாளர் வினோஜன், பொருளாளர் சிறிதரன் மற்றும் புலமைப் பரிசில் கருத்தரங்கு …
மேலும் வாசிக்ககாரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. திருக்குமார் தலைமையில் இன்று (07) காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி பங்களிப்போடு அனைவரின் ஆதரவோடும் (66) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் அதி கஷ்டத்திலுள்ள (26) மாணவர்களுக்கும் புத்தகப்பைகள், மற்றும் பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக …
மேலும் வாசிக்கமொனறாகலை மாவட்ட சரஸ்வதி வித்தியாலயத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு…
மொனறாகலை மாவட்ட மொ/சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று (05) பாடசாலையின் அதிபர். திரு.எம்.சுதாகரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் மொனறாகலை மாவட்ட வலயக்கல்வி அலுவலக சுகாதார உடற்கல்வி பாட வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பண்டார அவர்களும், மொனறாகலை பொலிஸ் நிலையப் பிரிவு அதிகாரி சில்வா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி….
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (06) வெள்ளிக்கிழமை பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலமாக வைத்தியசாலையில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் குறித்த சிரமதான பணியினை அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் 1000 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை….
அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை ஒன்று இன்றைய தினம் (05) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகளில் இடம்பெற்றது. குறித்த பரீட்சை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற பாடசாலைகளின் அனைத்து தரம் 05 மாணவர்களையும் உள்ளடக்கியதாக அண்ணளவாக ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் …
மேலும் வாசிக்கதிகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு….
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (04) அதிபர் திரு.M. தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்களும் , விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பாடசாலை Epsi திரு.M.யோகராஜா, Dr. S.அகிலன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. W.M.B.விஜயதுங்க பண்டார …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு….
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று, திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (04) புதன்கிழமை அதிபர் திரு.JR.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் பங்கு பற்றிய சிறு ஊர்வலம் ஒன்றும் காலை வேளையில் ஏற்பாடு செய்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் …
மேலும் வாசிக்க