Latest News
Home / Kirishanth admin (page 22)

Kirishanth admin

மான் இறைச்சி என்ற பெயரில் குரங்கு இறைச்சி விற்பனை எச்சரிக்கை!

-ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மான் மற்றும் மரை இறைச்சிகள் எனும் பெயரில் குரங்கு இறைச்சிகளை மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதனை அறியக்கூடியதாக இருக்கிறது. சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், வீடுகளில் சேமித்து வைத்திருத்தல், உணவுக்காக எடுத்துக் கொள்ளுதல் என எமது நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற நிலையில். மான், மரை போன்ற இறைச்சிகளை அதன் …

மேலும் வாசிக்க

ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” திட்டத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு….

“ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பானது தனது கால் தடத்தைப் பதித்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகள், இடைநடுவே கைவிடப்படும் அவல நிலையை ஒழிக்குமுகமாக, நாடு முழுவதும் பரந்துபட்டளவில் செயற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இணைந்த கரங்கள் அமைப்பினால் இம்முறை, பதுளை மாவட்டம் ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவா/ பது/மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது கல்வி உதவிக் …

மேலும் வாசிக்க

மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது. தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை …

மேலும் வாசிக்க

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு….

பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இன்றைய தினம் (20) நீளம் தாண்டுதல் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி சிவகுமார் விபுர்சனா வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும், வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.  

மேலும் வாசிக்க

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான …

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு உலகத் தலைவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஐ.நா. பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியுயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட …

மேலும் வாசிக்க

‘குருபிரதிபா பிரபா’ விருது பெற்ற அதிபர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன்….

கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் மற்றும் சமாதான நீதவானுமான திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்களின் சேவையைப் பாராட்டி இன்றைய தினம் (19) கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் ‘குருபிரதிபா பிரபா’ விருது வழங்கப்பட்டது. ‘குருபிரதிபா பிரபா’ விருதினை பெற்ற திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்கள் தற்போது திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக திறன்பட …

மேலும் வாசிக்க

கஞ்சிகுடிச்சாறு பகுதியில் விறகுக்கு சென்ற ஆண் ஒருவர் கரடி தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிப்பு…

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்ற ஆண் ஒருவரை கரடி தாக்கியுள்ளது. குறித்த நபர் திருக்ககோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 சின்ன தோட்டம் காயத்திரி கிராமத்தை சேர்ந்தவர் 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ் கரடி தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இவர் இன்று (18) காலை விறகு எடுப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதலுக்குள்ளாகிய நபர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் ஆதார …

மேலும் வாசிக்க

தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீதான தாக்குதல் – 6 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்தியமை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க