பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வைபவ ரீதியாக காலை ஆரம்பமானது. இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களையும் நவீனமயப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
மேலும் வாசிக்கநாட்டில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள்
“சனச” திட்டத்தை முன்னிட்டு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் 200,000 குடும்ப அலகுகளின் பொருளாதாரம் வலுவடையும் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். அம்பலாந்தோட்டை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. …
மேலும் வாசிக்கஅஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய மாற்றம்!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ளவர்கள் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் செல்லுபடிக் காலத்தை ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி …
மேலும் வாசிக்கசம்மாந்துறை கப்சோ (GAFSO) நிறுவனத்தினால் சமூக ஊடக ஆர்வளர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஆரம்பம்
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் “Youth Media Project” வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (26) கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் காரைதீவு பிரதேசத்திலுள்ள தனியார் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. GCERF, HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. …
மேலும் வாசிக்கசிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரனே ஒன்றிணைக்க வேண்டும் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!
சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் காலப் பணியை அவர் ஆற்ற வேண்டும் என்றும் செயலூக்கமான நடவடிக்கை வாயிலாவே ஈழத் தமிழ் மக்களின் …
மேலும் வாசிக்கநாடாளுமன்ற அமர்வுகள் நிறைவு : ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படும் என அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட வர்த்தமானி வெளியிடடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் 9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி …
மேலும் வாசிக்கஇணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் இன்று உரையாற்றியிருந்தனர். இணைய பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகளுக்கு இது முகம் கொடுத்திருந்தது. ஊடக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், புத்திஜீவிகள் …
மேலும் வாசிக்க10 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை?
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள் அனைவரும் அண்மையில் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமை தொடர்பாக விளக்கமளிக்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த கருத்துத் …
மேலும் வாசிக்ககி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொன்மைமிக்க தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு…..
ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன் ” இராசதானி ஆண்ட புண்ணியபூமி மற்றும் காட்டில் வழி தவறியவர்க்கு வழிகாட்டி காட்சியளித்து உணவளித்த தெய்வீகத்தலம் ஆகிய சிறப்பு மிக்கதாக தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயம் சிறப்பு மிக்கதாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் அருள்மிகு ஸ்ரீ …
மேலும் வாசிக்கநாளை இடம்பெறவுள்ள நாடளாவிய ரீதியிலான போராட்டம்
நாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட ஏயுவு கொடுப்பனவை இணைப்பதற்கு திறைசேரி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இடையூறு செய்வதாக ஜனாதிபதி நிதி அமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்த அமைச்சரவை பத்திரம் மூலம் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாத சம்பளத்துடன் உரிய கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் …
மேலும் வாசிக்க