Latest News
Home / இலங்கை / கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொன்மைமிக்க தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு…..

கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொன்மைமிக்க தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு…..

ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன் ” இராசதானி ஆண்ட புண்ணியபூமி மற்றும் காட்டில் வழி தவறியவர்க்கு வழிகாட்டி காட்சியளித்து உணவளித்த தெய்வீகத்தலம் ஆகிய சிறப்பு மிக்கதாக தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயம் சிறப்பு மிக்கதாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) புதன்கிழமை காலை 9.40 முதல் 10.30 வரையான சுப முகூர்த்த வேளையில் ஆலய தலைவர் த.முருகானந்தராசா தலைமையிலும் நிர்வாகத்தினர் ஒழுங்கு படுத்தலுடன் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மற்றும் ஆலய நிர்வாக சபையினர், பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் குறித்த ஆலயம் தொன்மை வாய்ந்ததும் சிறப்பு மிக்கதுமாக காணப்படுவதுடன் குறித்த பிரதேசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. இவ்வாறான நிலையில் இவ் ஆலயத்தின் புனர் நிர்மாண செயற்பாடுகளுக்கு தன்னார்வமாக தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடிந்தவர்கள் வழங்குமாறு நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *