Latest News
Home / இலங்கை / தமிழகத்தில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வருகை!

தமிழகத்தில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வருகை!


இந்தியாவின் தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் நேற்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் 14,712 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் மற்றும் 38 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சரின் பணிப்புரையின் பேரில் இந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் கடந்த மாதம் நாட்டை வந்தடைந்திருந்தது.

அதில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 25 மெட்ரிக் டன் மருந்துகள் அடங்கியிருந்தன.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *