இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச யோகாசன தினம் நேற்று (21) உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மைதானத்தில் திரு.ரி.ஜெ. அதிசயராஜ் (பிரதேச செயலாளர், கல்முனை வடக்கு) அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் முன்னிலை அதிதியாக ஸ்ரீமத் சுவாமி தட்ஷஜானந்தஜீ மகராஜ். – பொது முகாமையாளர், இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு . பிரதம அதிதி :- திரு .ஜெ.எம் .ஏ டக்லஸ் – அரசாங்க அதிபர் , மாவட்ட செயலகம், அம்பாறை. கௌரவ அதிதி :- திரு. வே .ஜெகதீசன் – மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம், அம்பாறை. சிறப்பு அதிதிகள் :- திரு. சோ. ரங்கநாதன் – பிரதேச செயலாளர், நாவிதன்வெளி. திரு.சி. ஜெகராஜன். பிரதேச செயலாளர், காரைதீவு. திரு.த. கஜேந்திரன் – பிரதேச செயலாளர், திருக்கோயில்.
திரு. வி. பவாகரன் – பிரதேச செயலாளர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று.
திரு .ந. நவநீதராஜா உதவி பிரதேச செயலாளர், பொத்துவில் என்பவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.