Latest News
Home / இலங்கை / கொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்

கொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2 ஆயிரத்து 524 பேர் குணமடைந்திருந்த நிலையில், மேலும் 13 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடு திரும்பியதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ள நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 286 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் 68 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *