கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை சாமியார் நித்யானந்தா இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இந்த பணப் பரிமாற்ற முறையில் உலகிலுள்ள 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்யள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி வங்கி, பணப்பரிமாற்று என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியான இன்று அதை முறையாக அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.
கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளைக் கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான கடவுச்சீட்டு குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.