Latest News
Home / விளையாட்டு / சாமிக்கவுக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை!

சாமிக்கவுக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை!

இலங்கை அணியின் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை விதித்துள்ளது.

அண்மையில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை கருணாரத்ன ஒப்புக்கொண்ட நிலையில் போட்டித் தடைக்கு மேலதிகமாக, 5000 டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது சிட்னியில் உள்ள இரவு விடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டதாக சாமிக்க கருணாரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Check Also

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *