-ம.கிரிசாந்-
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அண்மைக்காலத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணியினை ஏற்பாடு செய்து முன்னெடுத்தனர்.
அமைப்பின் தலைவர் க.சுந்தலிங்கம் தலைமையில் அமைப்பின் ஆலேசாகரும் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த சிரமதான செயற்பாட்டிற்கு கண்ணகிகிராம பொதுமக்கள், கண்ணகிகிராம விவசாய சமூகம் மற்றும் பிரதேச சமூக அமைப்புக்கள் தங்கள் ஆதரவை வழங்கி சிரமதானத்திலும் கலந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிரமதான செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட கண்ணகிகிராம பிரதேசத்தில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதுடன் யானை தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான குடும்பபெண் ஒருவர் உயிரிழந்தமை காரணமாக பிரதேச மக்கள் சோகத்தில் காணப்படுகின்ற நிலையில்,
யானைகளின் வருகையை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் தடுக்கும் நோக்குடன் குறித்த சிரமதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.