Latest News
Home / இலங்கை / ‘தமிழர் தாயக மண்வளத்தைக் காப்போம்’ மண் சுரண்டல் போரில் மாவை, சரவணபவன் எம்.பி பங்கேற்பு!

‘தமிழர் தாயக மண்வளத்தைக் காப்போம்’ மண் சுரண்டல் போரில் மாவை, சரவணபவன் எம்.பி பங்கேற்பு!

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி மற்றும் மாதர் அணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா,  ஈ.சரவணபவன்,  வடக்கு மாகாண சபை முன்னாள்உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிறோஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கன் மற்றும் ஆதரவாளர்கள்எனப் பலர்  கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் ‘மண் வளத்தைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில் முற்பகல் வடமராட்சி கிழக்கில் திரண்ட 50இற்கும் மேற்பட்டோர், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளப்படுத்தினர்.

அத்துடன், மணல் வளம் சூறையாடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரும் மனு ஒன்றை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் வழங்கும் பொருட்டு செயலரின் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *