Latest News
Home / இலங்கை / க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர்  2ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது. பரீட்சைக்காக 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *