Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 05 மாணவர்களுக்கு புலமைத்தேர்வு புத்தகம் வழங்கல் நிகழ்வு…..

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 05 மாணவர்களுக்கு புலமைத்தேர்வு புத்தகம் வழங்கல் நிகழ்வு…..

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 05 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அவர்களுக்கு புலமைத்தேர்வு எனும் புத்தகம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் இன்று (18) மாலை 3.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் பியசேன கிருத்திகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைத்தேர்வு எனும் புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கி இருந்ததுடன், இதற்கான நிதி உதவியையும் அவரே வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *