Latest News
Home / இலங்கை / கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியாது என அமைச்சர் அறிவிப்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியாது என அமைச்சர் அறிவிப்பு!!

சுகாதார பிரிவினால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கும் வரை கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இரகசியமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் கடற்படையினரால் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் என்பது இதுவரையில் சிறப்பான ஒரு நிலைமையில் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *