Latest News
Home / இலங்கை / இலங்கையில் கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில் கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இன்னமும் நீங்கவில்லை என பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தியர் ஜயருவன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதிக ஆபத்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அனைவரும் ஆபத்தினை கருத்திற் கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்புடன் செயற்படுவது அனைவரதும் கடமையாகும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் தொடரபில் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து மக்களும் குறைந்த அவதானமே செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வது சமூகத்தின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *