Latest News
Home / இலங்கை / இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமர் மஹிந்த!

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமர் மஹிந்த!

ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தேகம – பிலகொட – பூர்வாராம விஹாரையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைப்பாட்டை கடந்த 5 வருடங்களில் அவதானிக்க முடிந்ததாகவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

19 ஆவது திருத்தத்துடன் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் இணைந்து செயற்பட வேண்டிய யுகமே தற்போது நிலவுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் நடைபெறும். தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாகவே எதிர்கால பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டிவரும் எனவும் கூறியுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *