அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ், மேலும் ஐந்து நாடுகளுக்கு பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இருந்து தற்போது, கிட்டதட்ட 39இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு ஆபிரிக்க நாடுக்கும் நியூஸிலாந்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வெளியான தகவல்களின்படி நியூஸிலாந்தில் கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நைஜீரியாவிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளான லித்துவேனியா, பெலாரஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
லிதுவேனியாவில், இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா வைரஸ் இருப்பதை லிதுவேனியா உறுதிப்படுத்தியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.