Latest News
Home / இலங்கை / அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு….

-ம.கிரிஷாந்-

அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்றைய தினம் (28.09.2023) வழங்கிவைக்கப்பட்டது.

ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில்.

இதன் அடிப்படையில் இன்றைய தினம்(28) அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு பிரபஞ்சம் செயற்றிட்டத்தின் ஊடாக அண்ணளவாக ஆறு மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் வண்டி வழங்கப்பட்டது.

இதற்கான சாதகமாக செயற்பாடுகளை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர் உதயகுமார் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் பிராந்திய இணைப்பாளர் வெ.வினோகாந்த் ஆகியோர் முன்னெடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *