அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் நேற்றய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது மேலும் இரவு வேலைக்கான 400 உணவுப்பொதிகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி), ஆலையடிவேம்பு இத்தியடி முன்பகுதி
மற்றும் அக்கரைப்பற்று 7/2 (கலாச்சார மண்டபத்திற்கு பின் பகுதி) பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வெள்ளத்தின் மத்தியிலும் வீடுகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் திறன்பட வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கான நிதிப்பங்களிப்பை லண்டனை சேர்ந்த கல்யாணசுந்தரம் நித்தியானந்தன் அவர்கள் அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கு வழங்கியதுடன் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் அனைத்து உறுப்பினர்கள் பங்களிப்புடன் கழகத்தின் தலைவர், செயலாளர் அவர்களின் வழிநடத்தலுடன் சிறந்த முறையில் செயற்பாடு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.
உணவுப் பொதிகள் வழங்குவதற்கு மிகவும் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஆலையடிவேம்புவெப் இணையக்குழு தெரியப்படுத்தி பரிந்துரை செய்தது அதனை பெருமனதுடன் ஏற்று அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் குறித்த செயற்பாட்டினை வெற்றிகரமாக திறன்பட முன்னெடுத்திருந்தார்கள்.