அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (13) தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் சமைத்த 600 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று நாவற்காடு, கோளாவில் மற்றும் திராய்கேனி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கான நிதிப்பங்களிப்பை அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளான கத்தார் ALASKA Akkaraippattu நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் கத்தார் நாட்டின் கவி அவர்களுடன் பணிபுரியும் நண்பர்கள்,ரதுசன் சுதர்க்ஷ்சன், திரு.பகீரதன், மகேஷ்- லண்டன், கணேசபிள்ளை ரசீந்திரன் – அஸ்ரேலியா , திருமதி.சுகந்தா கந்தசாமி – அஸ்ரேலியா, திரு மில்ராஜ் குமார் – அஸ்ரேலியா , திரு.ஸ்ரீகாந்தன் – நோர்வே ,செல்வி. நிக்ஷ்சயா- அஸ்ரேலியா, திரு. கோவிஜன் – அஸ்ரேலியா ஆகியவர்கள் வழங்கி இருந்தார்கள்.
மேலும் களத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட கஜன், காந்தன், மிருஷாந், மிதுர்சனன், கிரிஷாந் மற்றும் இயந்திரத்தினை வழங்கிய கீது அவர்கள் குழுவினரும் மேற்கொண்டிருந்தார்கள்.