அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் இன்றைய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி ) மக்களுக்கு வெள்ளத்தின் மத்தியிலும் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
உணவு வழங்கும் செயற்பாட்டில் அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் அனைத்து உறுப்பினர்கள் பங்களிப்புடன் கழகத்தின் தலைவர், செயலாளர் அவர்களின் வழிநடத்தலுடன் சிறந்த முறையில் இடம்பெற்றிருந்தது.
உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான நாவற்காடு (நெக்கோட் பின்பகுதி) இடத்தினை ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பரிந்துரையினை ஏற்று அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் மேற்கொண்டிருந்தார்கள்.