Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சமைத்த உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சமைத்த உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் இன்றைய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி ) மக்களுக்கு வெள்ளத்தின் மத்தியிலும் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

உணவு வழங்கும் செயற்பாட்டில் அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் அனைத்து உறுப்பினர்கள் பங்களிப்புடன் கழகத்தின் தலைவர், செயலாளர் அவர்களின் வழிநடத்தலுடன் சிறந்த முறையில் இடம்பெற்றிருந்தது.

உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான நாவற்காடு (நெக்கோட் பின்பகுதி) இடத்தினை ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பரிந்துரையினை ஏற்று அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் மேற்கொண்டிருந்தார்கள்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *