ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் M.தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாக ஒய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் V.குணாளன், ஒய்வு நிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் S.ராசமாணிக்கம் மற்றும் இந்து, கிறிஸ்தவ மத குருக்கள் கலந்துகொண்டனர்.
முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் என்பனவும் இடம்பெற்றது.