Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்றில் முன்மாதிரியான அறநெறி நுாலகம் அங்குரார்ப்பண வைபவம்…

அக்கரைப்பற்றில் முன்மாதிரியான அறநெறி நுாலகம் அங்குரார்ப்பண வைபவம்…

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகாதேவஸ்தான முன்மாதிரியான அறநெறி நுாலகம் அங்குரார்ப்பண வைபவமும், பொங்கல் விழாவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டத்திற்கு அமைய நேற்றய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணியளவில் அக்கரைப்பற்று-7/2 ஸ்ரீ சித்தி விநாயகர் மகாதேவஸ்தான அறநெறி பாடசாலையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகாதேவஸ்தான தலைவர் மு.குழந்தை வடிவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ்,
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தார்கள்.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *