ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) நடைபெற்றது.
முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் புதிய மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் அதிதிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கிவைக்கப்பட்டது.