Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…

அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் M.தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16) நடைபெற்றது.

நிகழ்வில் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் S.சுரநுதன் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் S.அகிலன் விசேட அதிதியாகவும், அக்கரைப்பற்று- ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் திருமதி.R.நித்தியானந்தன், SDC – செயலாளர் .R.முரளிதர்ஷன் மற்றும் அக்கரைப்பற்று, மக்கள் வங்கி S.ராஜகாந்தன் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு வைத்தியர் S.அகிலன் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெறுமதி மிக்க நிகழ்வு மேடையும் அனைவர் முன்னிலையிலும் திறந்து வைக்கப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *