Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (16) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.

பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் S.சுகிர்தகலா மற்றும் K.பிரதா அவர்களின் தலைமையிலும் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மகளீர் அபிவிருத்தி நிலைய தலைவி J.காந்திமதி, கௌரவ அதிதிகளாக திருக்கோவில் உதவிக்கல்வி பணிப்பாளர் S.விவேகானந்தராஜா, ஆலையடிவேம்பு முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் M.S.M.கரீமா, கோளாவில் கிராம உத்தியோகத்தர் L.வினித்தா மற்றும் மாரியம்மன் கோளாவில் செயலாளர் ஆகியவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து மற்றும் அவர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு மகிழ்வுடன் வரவேற்கும் நிகழ்வும் மேலும் பொங்கல் நிகழ்வும் சிறப்பானதாக இடம்பெற்று இருந்தது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *