ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு /திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் T.கோமளம் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16) நடைபெற்றது.
நிகழ்வில் வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் P.H.கிரு, திருக்கோவில் வலய ஆசிரியர் வள முகாமையாளர் N.சுதாகரன், ஆலையடிவேம்பு பிரதேச கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி.M.மயூரன் என்பவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.