Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் மற்றும் தரம் 05 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு….

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் மற்றும் தரம் 05 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு….

 

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கான இலவச பாடநூல் வழங்கும் நிகழ்வு மற்றும் தரம் 5 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள் சிறந்த முறையில் பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் தரம் 4 மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் இன்று (16) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பிரதிக்கல்வி பணிப்பாளர் கங்காதரன், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் W.D வீரசிங்க அவர்களின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் P.சிந்துஜா ஆகியவர்கள் கலந்து சிறப்பித்ததுடன். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் தரம் 5 இல் கல்வி கற்று தரம் 6 இல் கல்வி கற்க வேறு பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு அதிபர் மற்றும் அதிதிகளால் பரிசுப்பொருள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான இலவச பாடநூல்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *