Latest News
Home / இலங்கை / இந்தியாவில் இருந்து வந்த பூனையால் கொரோனா ஆபத்து?

இந்தியாவில் இருந்து வந்த பூனையால் கொரோனா ஆபத்து?

இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர். இவர்களில் உயர்ஸ்தானிகருக்கு PCR பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதுடன் ஏனைய 18 பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவில் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அதனை இலங்கைக்கு கொண்டு வர பேராதனை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இந்த பூனையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்த பரிசோதனை நடத்தப்படவில்லை என தெரியவருகிறது.

விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இது ஆபத்தான நிலைமை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *