Latest News
Home / விளையாட்டு / SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் மஹேல!

SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் மஹேல!

SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த கூட்டத்தின் போது இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க இடமளிக்கும் நோக்கில் பதவியில் இருந்து விலகினார்.

1997 இல் கொழும்பு நாலந்தா கல்லூரியில் மாணவராக இருந்த காலப்பகுதி முதல் மஹேல ஜயவர்தன SSC  விளையாட்டுக் கழகத்துடன் இணைந்துள்ளார்.

அந்த வருடத்திலேயே ஒருநாள் சர்வதேச அரங்குக்குள் நுழைந்த அவர் 448 போட்டிகளில் 19.77 அரைச் சதம் உள்ளடங்கலாக 12,650 ஒட்டங்களை பெற்றுள்ளார்.

149 டெஸ்ட் போட்டிகளில் 34.50 அரைச் சதங்களுடன் 11,814 ஓட்டங்களை பெற்றுள்ள மஹேல, இருபதுக்கு 20 போட்டிகளிலும் பிரகாசித்த வீரராவார்.

தேசிய அணித் தலைவராக உலகக்கிண்ண இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திய அவர், சர்வதேச அரங்கிற்கு விடைகொடுத்த பின்னர் IPL கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *