Latest News
Home / ஆலையடிவேம்பு (page 60)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிப்பு!

வி.சுகிர்தகுமார்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள்  21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3 உம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1 ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகள் தொடர்ந்தும் …

மேலும் வாசிக்க

மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை!

  வி.சுகிர்தகுமார்   மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை செய்வதுடன் தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைக்குட்படுத்தப்பட்டு 21 நாட்களின் பின்னர் 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேங்கள் விடுவிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, இன்று (17) இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் ஆயுர்வேத மாகாண ஆணையாளர் Dr. இ.சிறிதரின் ஆலோசனை யில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை Dr.ஜி.சுகுணன், பிராந்திய தொடர்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கல்முனை Dr.M.A நபீல் அவர்களின் வழிகாட்டலில் மருத்துவ பொறுப்பதிகாரி , …

மேலும் வாசிக்க

விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்

வி.சுகிர்தகுமார் விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும் கூறினார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் இன்று முதல் விடுவிப்பதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இந்நிலையில் ஆலையடிவேம்பில் விடுவிக்கப்பட்ட பிரிவுகளின் நிலை தொடர்பில் மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அவர்களை தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே …

மேலும் வாசிக்க

நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுபடவுள்ள ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விபரம்! மற்றும் கட்டுப்பாடு விபரம்!

ஆலையடிவேம்பு பிரதேசம் உட்பட பல பகுதிகள் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் எனும் கேள்வி எழுந்து இருந்தது. இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன் 11587 அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 468 பேர் தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 80 பேர் …

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் இருவாரங்களை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி இன்று ஆரம்பம்!

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இருவாரங்களை கடந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரமின்றி வீடுகளில் தங்கியிருக்கும்; மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாறை ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவிலும்; சுமார் 6056 பேருக்கான தலா 10ஆயிரம் ருபா பெறுமதியான 6 கோடி ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாரை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் சுதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். ஆலையடிவேம்பில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாகவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பினால் மாத்திரமே இத்தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவ்வாறு மக்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் …

மேலும் வாசிக்க

இன்று முதல் வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்கள் மக்கள் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம்

COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நடமாடும் வாகனம் மூலமான வியாபாரிகள் மற்றும் இன்று (10.12.2020) தொடக்கம் எதிர்வரும் 18.12.2020 (வெள்ளிக்கிழமை) வரை அவர்கள் விற்பனைகளில் ஈடுபடவுள்ளார்கள். …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று முதல் கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வி.சுகிர்தகுமார் கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 14ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கொவிட் 19 செயலணிக்கூட்டம் இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதேச செயலாளர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்….

   -கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்…. ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக கொவிட் நிவாரணம் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இடர்கால உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி பெற தகுதியானவர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேற்படி கொவிட் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக ஆங்காங்கே மக்களால் சமூக வலைத்தளங்கள் மற்றும் …

மேலும் வாசிக்க