Latest News
Home / இலங்கை / 4 கொவிட் தொற்றாளர்கள் இணைந்து செய்த காரியம்!

4 கொவிட் தொற்றாளர்கள் இணைந்து செய்த காரியம்!

வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்த நான்கு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிகிச்சை நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த கொவிட் தொற்றாளர்கள் நான்கு பேரும் கடந்த 12 ஆம் திகதி விடுவிக்கப்படவிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களால் சிகிச்சை நிலையத்தில் இருந்து மின்னணு உபகரணங்கள் மற்றும் வேறு உபகரணங்கள் சில திருப்பட்டுள்ளதாக அந்த நிலையத்திற்கு பொறுப்பான வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *