தற்போதைய சூழ்நிலையில், 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட் தொற்று நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், மிகவும் அபாயம் மிக்கவை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 4 உருமாறிய வைரஸ்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவும் வைரஸ்களே இவ்வாறு அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.